2009-04-17 18:32:21

வத்திக்கான் திருப்பீடத்தின் விவிலிய மன்றத்தின் பொதுக்குழு அமர்வு.170409 .


வத்திக்கான் திருப்பீடத்தின் விவிலிய மன்றத்தின் பொதுக்குழு அமர்வு இம்மாதம் 20 தேதியிலிருந்து 24 தேதிவரை வத்திக்கானில் நடக்கவுள்ளது. இக்குழு அமர்வு வத்திகானின் தோமுஸ் சாங்க்தே மார்த்தேயில் நடத்தப்படுகிறது . திருப்பீடத்தின் திருச்சபை விசுவாசக் கொள்கை மன்றத் தலைவர் கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாடா தலைமை வகிப்பார் . இம்மன்றத்தின் செயலர் இயேசு சபையைச் சேர்ந்த கிளெமென்ஸ் ஸ்டாக் பொதுக்குழு அமர்வு நிகழ்வுகளை கவனித்துக் கொள்வார் . புது உறுப்பினர்கள் அமர்த்தப்பட்ட பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு அமர்வு இது எனத் தெரிகிறது . பொதுக்குழு அமர்வின்போது விவிலியத்தில் இறைத்தூண்டலும் உண்மையும் என்பது பற்றி ஆராயப்படும் எனக் கூறப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.