பொலிவியாவி்ல் கர்தினால் ஜூலியோவின் இல்லத்தில் குண்டு வீசப்பட்டது.170409.
இம்மாதம் 15 ஆம் தேதி பொலிவின் சாந்தாகுரூஸ் மறைமாவட்டக் கர்தினால் ஜூலியோ டெராசாஸ் இல்லத்தில்
விஷமிகள் குண்டு வீசியிருக்கின்றனர் . யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது . அவ்வேளை
கர்தினால் அங்கு இல்லை . குண்டு வீசப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை . கர்தினால் ஜூலியோவும்
, அந்நாட்டு ஆயர்களும் அங்கு ஆட்சி புரியும் இடது சாரிக் கட்சித் தலைவர் ஈவோ மொராலெசோடு
மோதி இருக்கின்றனர் . கர்தினாலை அச்சுறுத்த ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் குண்டு வீசியிருக்கலாம்
என நம்பப்படுகிறது .