2009-04-17 18:26:15

பொலிவியாவி்ல் கர்தினால் ஜூலியோவின் இல்லத்தில் குண்டு வீசப்பட்டது.170409.


இம்மாதம் 15 ஆம் தேதி பொலிவின் சாந்தாகுரூஸ் மறைமாவட்டக் கர்தினால் ஜூலியோ டெராசாஸ் இல்லத்தில் விஷமிகள் குண்டு வீசியிருக்கின்றனர் . யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது . அவ்வேளை கர்தினால் அங்கு இல்லை . குண்டு வீசப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை . கர்தினால் ஜூலியோவும் , அந்நாட்டு ஆயர்களும் அங்கு ஆட்சி புரியும் இடது சாரிக் கட்சித் தலைவர் ஈவோ மொராலெசோடு மோதி இருக்கின்றனர் . கர்தினாலை அச்சுறுத்த ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் குண்டு வீசியிருக்கலாம் என நம்பப்படுகிறது .








All the contents on this site are copyrighted ©.