ஏப்ரல் 16ல் திருத்தந்தை தமது 82 ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார் .170409 .
திருத்தந்தை தமது 82 ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார் .
தமது பிறந்தநாளைத்
திருத்தந்தை காஸ்டல் காண்டால்போவில் அவருடைய கோடைகால இல்லத்தில் கொண்டாடினார். புனித
வாரத்துக்குப் பிறகு இந்த வாரம் அவர் அங்கு ஓய்வில் இருக்கிறார் . திருத்தந்தை ஏப்ரல்
16 , 1927 ல் ஜெர்மனியின் மார்க்டெல் என்ற இடத்தில் பிறந்திருக்கிறார் . அவ்வாண்டு அந்நாள்
புனித வாரத்தில் சனிக்கிழமையாகும் . அந்நாள் இரவில் உயிர்ப்புப் பெருவிழாவன்று திருவிழிப்புத்
திருப்பலியில் அவர் திருமுழுக்குப் பெற்றிருக்கிறார். அவருக்கு ஜோசப் அலோசியுஸ் ராட்சிங்கர்
என்ற நாமம் சூட்டப்பட்டிருக்கிறது . ஏப்ரல் 16 ல் திருத்தந்தையின் பிறந்த நாளன்று பல
உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்கள் . அன்னை தெரசாவின் சகோதரிகள் திருத்தந்தையின்
குரல் துன்புறும் மக்களுக்கு ஆதரவாக இடையறாது ஒலித்துக் கொண்டிருப்பதாகக் கூறி திருத்தந்தைக்குப்
பாராட்டுத் தெரிவித்துள்ளனர் . பிரான்ஸ் நாட்டில் திருத்தந்தையைத் தொடாதே என்ற பெயரில்
புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது . பேஸ்புக் என்ற நிறுவனம் , எய்ட்ஸ் நோய் தீர
குரல் கொடுக்கும் வத்திக்கானுக்காக பண உதவி சேர்க்க , ஒரு தொண்டு நிறுவனத்தைத் திருத்தந்தையின்
பிறந்த நாளில் தொடங்கியுள்ளது . தமது பிறந்த நாளன்று நண்பகல் விருந்தை தமது சகோதரர்
ஜார்ஜ் ராட்சிங்கரோடு பகிர்ந்திருக்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்