2009-04-16 15:52:33

விடுதலைப் புலிகள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றனர் பிரிட்டன் மற்றும் பிரான்சு நாட்டினர் .160409


இலங்கையின் விடுதலைப் புலிகள் மக்களை தங்கள் பாதுகாப்புக்காக முன் நிறுத்துவது பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றனர் பிரிட்டன் மற்றும் பிரான்சு நாட்டினர் .

தமிழ் விடுதலைப்புலிகள் மக்களைப் பாதுகாப்பு வளையமாக வைத்துக் கொள்ளுவது பற்றி பிரிட்டிஷ் அரசும் , பிரான்சும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த 48 மணிநேர போர் நிறுத்தம் போது மக்கள் வெளியேற முடியாதவாறு புலிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் . போர் நிறுத்தக் கால அவகாசமும் மக்கள் வெளியேறப் போதியதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் . இதற்கு முன்னர் ஐநாவின் மனிதாபிமான அமைப்புக்கான தலைவர் இந்த நிலைமையைக் கண்டித்துள்ளார் . ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் விடுதலைப் புலிகள் பகுதியில் சிக்கியிருப்பதாக பிரி்ட்டனின் வெளியுறவுச் செயலர் ஜான் ஹோம்ஸ் தெரிவித்து புலிகளின் இச்செயலைக் கண்டித்துள்ளார் . பிரிட்டனும் பிரான்சும் இந்த மோசமான நிலைமை பற்றிக் கவலை வெளியிட்டுள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.