புனித திபார்தியுஸ், மாக்சிமஸ் மற்றும் வலேரியன் விழா. திபார்தியுசும் வலேரியனும் புனித
செசிலியாவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மனம் மாறியவர்கள். இவர்கள், மாக்சிமுஸ் என்ற
கொடுங்கோல் அரசனால் கொல்லப்பட்டனர்.
இதேநாள், 966- போலந்து கிறிஸ்தவ நாடானது.
1699 - கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல்
நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது
1865 - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் ஆபிரகாம்
லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்
1891- இந்திய சட்ட நிபுணர்
டாக்டர் அம்பேத்கார் பிறந்தார்
1912 - பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக்
வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில்
மூழ்கியது
1950 - தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ரமண மகரிஷி இறைவனடி எய்தினார்