திருச்சபை சொத்துக்களை அரசின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்ற பரிந்துரையை மத்திய
பிரதேச அரசு புறக்கணித்திருப்பது குறித்து ஆயர்கள்
ஏப்ரல்13,2009. திருச்சபை சொத்துக்களை அரசின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்ற
பரிந்துரையை மத்திய பிரதேச அரசு புறக்கணித்திருப்பது குறித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்
அம்மாநில கத்தோலிக்க ஆயர்கள்.
அரசின் இத்தீர்மானம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டவுடன்
கருத்து தெரிவித்த போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, அரசின் இத்தீர்மானத்தை வரவேற்பதாகக்
கூறினார்.
முஸ்லீம்களுக்கென அமைக்கப்பட்டுள்ள வாக்ப் அமைப்பு போல, திருச்சபை சொத்துக்களை
நிர்வகிக்கவும் ஓர் அமைப்பை உருவாக்குமாறு மத்திய பிரதேச சிறுபான்மை குழு இவ்வாண்டில்
அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு கத்தோலிக்க குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இக்குழுவின் பரிந்துரையைப் புறக்கணிக்குமாறு போபால் பேராயர் லியோ கொர்னேலியோவும்
அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவ்ஹானுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மத்திய
பிரதேச மாநிலத்தின் ஏறத்தாழ ஆறு கோடி மக்களில் 91 விழுக்காட்டினர் இந்துக்கள்.