மரியா கல்லறைக்கு வெளியே அழுது கொண்டே நின்று கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே
வெண்ணாடை அணிந்த இரு வானதூதர் இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும்
மற்றவர் கால்மாட்டிலுமாக அமர்ந்திருந்ததைக் கண்டார். அவர்கள் மரியாவிடம், ' அம்மா, ஏன்
அழுகிறீர்? ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டனர்;
அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை ' என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப்
பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கே நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து
கொள்ளவில்லை. ஆனால் இயேசு அவரிடம், ' மரியா ' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, '
ரபூனி ' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ' போதகரே ' என்பது பொருள். இயேசு அவரிடம்,
' என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என்
சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ' என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள்
கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் ' எனச் சொல் ' என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று,
' நான் ஆண்டவரைக் கண்டேன் ' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.