டெல்லி உயர்மறைமாவட்டத்தின் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள்
ஏப்ரல்07,2009. இந்தியாவின் டெல்லி உயர்மறைமாவட்டம் தொடங்கப்பட்டதன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள்
பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ மற்றும் ஆயர் பிராங்கோ மலுக்கல்லால் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
இக்கொண்டாட்டங்களையொட்டி
ஞாயிறன்று செஞ்சிலுவை சங்கம் மற்றும் திருக்குடும்ப மருத்துவமனையால் நடத்தப்பட்ட இரத்ததான
முகாமில் எண்ணற்றோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
இயேசு தன் குருதியைச்
சிந்தி நமக்கு வாழ்வை வழங்கினார் என்பதை மனதிற் கொண்டு கடந்த 50 ஆண்டுகளாக உழைத்து வரும்
டெல்லி உயர்மறைமாவட்டம் இரத்ததானத்தை ஊக்குவித்து வருவதாகவும் பேராயர் கொன்செஸ்சாவோ
கூறினார்.
டெல்லி உயர்மறைமாவட்டம், தனது 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி சேரிப்பகுதிகளில்
கழிவறைகளைக் கட்டிக் கொடுக்கவும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.