2009-04-06 14:49:28

லாக்குய்லா நகரில் நில அதிர்ச்சியில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த அனுதாபம்


ஏப்ரல் 06,2009.இத்தாலிய தலைநகர் உரோமைக்கு நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லாக்குய்லா நகரில் இன்று அதிகாலை இடம் பெற்ற நில அதிர்ச்சியில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்டின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி அவ்வுயர்மறைமாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயால் லாக்குய்லா பேராயர் ஜுசப்பே மொலினாரிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த இரங்கல் தந்தி, இந்நிலஅதிர்ச்சியில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கானத் திருத்தந்தையின் செபத்திற்கு உறுதி கூறுகிறது.

இந்நிலஅதிர்ச்சியில் சில குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறித்தும் திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையும் பெற்றோருக்கான ஆறுதலும் இத்தந்தி செய்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 68 ஆயிரம் மக்கட் தொகையைக் கொண்ட லாக்குய்லா நகரில் இன்று அதிகாலை இத்தாலிய நேரம் 3.32 மணிக்கு இடம் பெற்ற நிலஅதிர்ச்சியில் இன்று நண்பகல்வரை கிடைத்த புள்ளி விபரங்களின்படி ஐம்பது பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமாகியுள்ளதில் ஐம்பதாயிரம் பேர் வரை உறைவிடங்களை இழந்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.