யூதசால் அவருடைய திட்டங்களை மற்ற சீடர்களிடமிருந்து
மறைக்க முடிந்தது . ஆனால் இயேசுவிடமிருந்து மறைக்கமுடியவில்லை . இங்கு நாம் எப்படி இயேசு
பாவிகளிடம் நடந்து கொள்கிறார் எனக் காண்கிறோம் . வாழ்க்கையில் மிகப் பெரிய மறைபொருள்
, புரியாத புதிர் கடவுள் அளவில்லாத அளவு மனிதருடைய மனச் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார்
எனபதாகும் .
இயேசு பாவிகளைக் கட்டாயப்படுத்தி வாழ்வில் மாற்றம் கொண்டுவரச் செய்யவில்லை
. மாற்றம் பெறுமாறு அழைப்பு விடுத்தார் . மாற்றம் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார் . யூதாசின்
ஒவ்வொரு அடியெடுத்தலிலும் இயேசு இதமாகவே நடந்து கொண்டார் . யூதாசை அவர்கள் குழுமத்தின்
பணப் பொருப்பாளராக நியமித்தார் . இறுதி இராவுணவை மற்றவர்களோடு சேர்ந்து உண்பதற்கும் அழைத்திருந்தார்
.
நம் வாழ்வை மேம்பட்ட நிலைக்கு மாற்றுமாறு இயேசு அழைப்பு விடுக்கும்போது நாம்
அவர் அழைப்பை மனதார ஏற்றுக் கொள்கிறோமா .அன்புதான் ஒன்றை அழித்துவிடாது மாற்றக் கொண்டுவரக்கூடிய
சக்தியைக் கொண்டது என்கிறார் ஞானி தெய்யார்டு தெ சார்தான் .