சீனாவின் ஜெங்டிங் மறைமாவட்ட ஆயர் ஜியா ஜிகுவோ சிறை வைப்புக்கு வத்திக்கான் வருத்தம்
தெரிவிக்கிறது . 030409
சீனாவின் ஜெங்டிங் மறைமாவட்ட ஆயர் ஜியா ஜிகுவோவுக்கு 74 வயதாகிறது .
ஆயர் ஜியா
ஜிகுவோ சிறை வைப்புக்கு வத்திக்கான் வருத்தம் தெரிவிக்கிறது . சீனாவில் திருச்சபை பற்றிய
அறிக்கையை வத்திக்கான் திருப்பீடம் வெளியிட்டுள்ளது . வரலாற்றில் முதல்முறையாக சீனாவில்
கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன . சீனாவில்
உள்ள குருக்கள் , குருமாணவர்கள் , துறவியர் ஆகியோரின் பயிற்சி பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது
. கிறிஸ்துவுக்காகப் பணி செய்வோர் கிறிஸ்துவின் நல்ல சீடர்களாக இருக்க இவ்வறிக்கை தூண்டுகோலாக
இருக்கும் .
சீனாவில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை பற்றிய மூன்று நாள் கருத்தரங்கு
மார்ச்சு 30 லிருந்து ஏப்ரல் முதல் தேதி வரை வத்திக்கானி்ல் நடந்தது . இவ்வியாழன் பிற்பகலில்
திருத்தந்தை கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை வரவேற்றுப் பேசினார் . ஆயர் ஜியா ஜிகுவோ
சிறைவைக்கப்பட்டது எல்லோருக்கும் வேதனையைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது . கருத்தரங்கில்
சீன அரசு வத்திக்கானோடு தொடர்புடைய கிறிஸ்தவத் தலைவர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலைக்
கொடுத்தும் , துன்புறுத்தியும் , அவர்களது உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை எடுத்தும்
வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .