சென்ற ஞாயிறிலிருந்து செவ்வாய்வரை எட்டு நாடுகளின் உச்ச மாநாடு உரோமையில் நடந்தது . இக்
கருத்தரங்கில் நல வாழ்வுத்திட்டங்களை ஊக்குவிப்பது பற்றியும் , மக்களுக்கு வேலை வாய்ப்பைத்
தருவது பற்றியும் ஆராயப்பட்டது . பிரிட்டன் , கனடா , பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி ,
ஜப்பான் ரஷ்யா மற்றும் அமெரிக்க ஐ நாடுகள் இதில் கலந்து கொண்டன . இந்தியாவிலிருந்தும்
பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் .
அக்கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பிய
கர்தினால் பெர்த்தோனே தற்போது உருவாகியிருக்கும் பொருளாதாரச் சிக்கல் மனிதர்களை முன்வைக்காமல்
வருவாய்க்கு முதலிடம் கொடுத்ததே காரணம் எனக் கூறியுள்ளார் . இந்த உச்ச மாநாட்டின் தலைவர்
இத்தாலியின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மவுரீசியோ சக்கோனிக்கு அனுப்பிய மடலில் பொதுநலத்தையும்
மனித மாண்பையும் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே
.