2009-04-02 20:24:29

கருக்கலைப்பு மருத்துவத்தின் தோல்விக்கு அறிகுறி என்கிறார் பேராயர். 020409.


பிரேசில் நாட்டின் தலைநகர் சாண்பவுலோவின் பேராலயத்தில் 5000 பேருக்கும் அதிகமானவர்கள் கூடி கருக்கலைப்புத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் .



அவர்களுக்கு உரை நிகழ்த்திய கர்தினால் ஒடிலோ பேத்ரோ கருவைக் கலைப்பது மருத்துவத்தின் தோல்வி என்றார் . கருக்கலைப்பு வாழ்வுக்கு எதிரானது என்றும் , உயிரைக்காப்பதற்கே திருச்சபை ஆதரவு அளிப்பதாகவும் கர்தினால் ஒடிலோ தெரிவித்தார் . நாடுகள் சட்டங்கள் இயற்றி குழந்தை கருவில் உருவாவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார் .








All the contents on this site are copyrighted ©.