உண்மையான கிறிஸ்தவம் சாதாரண மக்களிடையே குடிகொள்வதாகக் கூறுகிறார் சுவாமி அக்னிவேஷ் .
020409 .
இந்துமத மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரிய சமாஜத்தின் அகில உலக மன்றத்தின் தலைவர் சுவாமி
அக்னிவேஷ் . மார்ச்சுத் திங்கள் 31 ஆம் நாள் பங்களூரின் ஐக்கிய இறையியல் கல்லூரியில்
தேசிய துன்புறுத்தப்படுவோர் தினத்தில் தலைமை உரை நிகழ்த்தினார் . அதுபோது சிறுபான்மை
மக்களுக்கு எதிராகப் புரியும் குற்றங்கள் மனுக்குலத்துக்கு எதிரானவை எனக் கூறினார் .
கடந்த ஆண்டு ஒரிசாவின் காந்தமாலில் நடந்த வன்முறைபற்றிக் கூறிய அவர் சட்டம் குற்றவாளிகளைக்
தண்டிக்க வேண்டும் எனக் கூறினார் . 2004 ஆம் ஆண்டில் சரியான வாழ்வு என்ற அமைப்பு சுவாமி
அக்னிவேசுக்கு பதக்கம் வழங்கிப் பெருமைப் படுத்தியது . சிறையில் இருக்கும் மனோஜ் பிரதான்
சென்ற ஆண்டு வன்முறைகளுக்குக் காரணமாக இருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்
. அவர் வரும் தேர்தலுக்கு வேட்பாளராக நிற்பதையும் , அவருக்கு வாய்ப்பளிப்பதையும் கண்டித்தார்
சுவாமி அக்னிவேசு .