வத்திக்கான் பசிலிக்காவில் பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல் இறந்ததன் நான்காம் ஆண்டு நினைவுத்
திருப்பலி
ஏப்ரல்01,2009. பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல் இறந்ததன் நான்காம் ஆண்டு நினைவுத் திருப்பலியில்
கலந்து கொள்வதற்கு உரோம் மறைமாவட்ட இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட்
திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கானத் திருப்பீட அலுவலகம்
வெளியிட்டுள்ள அறிக்கையில், பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல் இறந்த நாளான ஏப்ரல்2, இவ்வியாழன்
மாலை 6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் அவரின் நினைவாகத் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் திருப்பலி நிகழ்த்துவார் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு குருத்தோலை
ஞாயிறன்று மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு
பகுதியாக இந்த நிகழ்வு இருக்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
மேலும், வருகிற
ஞாயிறு குருத்து ஞாயிறு திருவழிபாட்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி இளையோர், ஸ்பெயினின்
மத்ரித் இளையோரிடம் உலக இளையோர் தினத் திருச்சிலுவையைக் கொடுப்பார்கள்.
உலக இளையோர்
தினம் 2011ல் மத்ரித்தில் சிறப்பிக்கப்படும்.