மங்கோலியத் தலத்திருச்சபை பிற திருச்சபைகளின் உதவியுடன் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது
ஏப்ரல் 01,2009. தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் நாடுகளை வெகுவாய்ப் பாதித்திருக்கின்ற
போதிலும் மங்கோலியத் தலத்திருச்சபை பிற திருச்சபைகளின் உதவியுடன் தொடர்ந்து வாழ்ந்து
வருகிறது என்று அந்நாட்டு ஆயர் வென்சஸ்லாவோ பதில்லா கூறினார்.
தென் கொரியாவில்
இரண்டு கத்தோலிக்கப் பங்குகள், ஓர் ஆரம்பப் பள்ளிக்கு உதவி செய்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட
ஆயர், தென் கொரிய கத்தோலிக்கர் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகக்
கூறிய அதேவேளை, மங்கோலியத் தலத்திருச்சபைக்காக உதவி செய்ய முனவந்தது உள்ளத்தை நெகிழ வைத்தது
என்றார்.