2009-04-01 14:33:31

திருத்தந்தையின் கடிதத்திற்கு பிரிட்டன் பிரதமரின் நன்றிக் கடிதம்


ஏப்ரல்01,2009. மேலும், திருத்தந்தையின் இக்கடிதத்திற்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதியுள்ள பிரிட்டன் பிரதமர் கோர்டன் ப்ரவுன், தான் முதலிடம் கொடுக்க நினைக்கும் விவகாரங்களில் கடும் வறியோருக்குப் பாதுகாப்பு வழங்குவதும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடியான கட்டங்களிலும் பணக்கார நாடுகள், வளர்ச்சித் திட்டங்களுக்கான தங்கள் வாக்குறுதிகளுக்குப் பிரமாணிக்கமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவரின் பதில் கடிதம் கூறுகிறது.

உலகப் பொருளாதாரத்திற்கு இது முக்கியமான தருணம் என்றுரைத்த ப்ரவுன், ஒவ்வொரு கண்டத்திலும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் இலட்சக்கணக்கான மக்களுடன் இணைந்து பிரச்சனையைத் தீர்க்கலாம் அல்லது இந்த நெருக்கடி அப்படியே தொடருவதற்கும் விட்டுவிடலாம் என்று கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமரும் திருத்தந்தையும் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வத்திக்கானில் சந்தித்த போது இந்தப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து கலந்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.