அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் இயலக்கூடியதே, நாட்டோ நாடுகளின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்
ஏப்ரல்01,2009. அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் இயலக்கூடியதே எனினும் அத்தகைய உலகம் பாதுகாப்பானது
என்று நாட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் உடன்படிக்கை நிறுவனத் தலைவர்களிடம் கூறினர் கிறிஸ்தவ
சபைகளின் தலைவர்கள்.
உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றம், ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின்
அவை, அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய கிறிஸ்தவ சபைகளின் அவை, கானடா கிறிஸ்தவ சபைகளின் அவை
ஆகியவற்றின் பொதுச் செயலர்கள் இணைந்து நாட்டோ ஒப்பந்த நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அமைப்பதற்கு முயற்சிக்குமாறு
விண்ணப்பிக்கும் அக்கடிதம், ஐரோப்பிய நாடுகளில் இன்னும் வைக்கப்பட்டுள்ள, போரில் பயன்படுத்தக்கூடிய
நூற்றுக்கணக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு அணு ஆயுதங்கள் அகற்றப்படுவதற்கு விருப்பம் தெரிவிக்குமாறும்
கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெர்மனியின் பேடன்-பேடன் மற்றும்
ஹெலிலும், பிரான்சின் ஸ்டார்ஸ்பூர்கிலும் வருகிற வெள்ளி, சனி தினங்களில் நாட்டோ நாடுகளின்
தலைவர்களின் உச்சி மாநாடு இடம் பெறவுள்ளதை முன்னிட்டு இக்கடிதத்தை வெளியிட்டுள்ளனர்
கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்