தவக்காலச் சிந்தனை – நாம் இரண்டு வழிகளில் அடிமைகளாக வாழலாம் . ஒன்று நாம் ஆங்கிலேயருக்கு
அடிமைகளாக இருந்தது போல பிறருக்கு அடிமையாக இருக்கலாம் . அடுத்து நம்மிடமே நாம் அடிமைகளாக
இருக்கலாம் . தீய பழக்கங்களுக்கும் , தீய கொள்கைகள் காரணமாக ஒரு சார்பாகச் செயல்படுவது
, பொறுமை இழப்பது போன்ற பல குணங்கள் நம்மை அடிமைப்படுத்தலாம் . நாம் இயேசுவின் வழிகாட்டுதலைப்
பின்பற்றினால் விடுதலை பெற வாய்ப்பு உள்ளது .