புனித பெஞ்சமின் விழா. இவர், பாரசீக நாட்டில் வேத கலகத்தின் போது துன்புறுத்தப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்.
இதேநாளில், 1499 திருத்தந்தை 4ம் பத்திநாதர்
பிறந்தார்.
1889 – உலக அதிசயங்களில் ஒன்றான பாரிசிலுள்ள ஈபெல் கோபுரத்தின் தொடக்க
விழா நடத்தப்பட்டது.
1917 - அமெரிக்க ஐக்கிய நாடு, டென்மார்க்கிடம் 2 கோடியே 50
இலட்சம் டாலர் பணம் கொடுத்து டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை வாங்கி அவற்றிற்கு அமெரிக்க
கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1959 - டென்சின் கியாட்சோ என்ற திபெத்தின்
14வது தலாய் லாமாவுக்கு, இந்தியாவில் அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டது.
1979
- கடைசி பிரித்தானியப் படையினர் மால்ட்டாவை விட்டு விலகினர். மால்ட்டாவும் விடுதலை தினத்தை
அறிவித்தது
2007 - ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடைபிடிக்கப்பட்ட முதலாவது பூமி
நேரத்தில் 22 இலட்சம் பேர் பங்கு கொண்டனர்.