மகளிருக்கான புதிய திட்டங்கள் கடவுளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்கிறார் கர்தினால்
ரெனாட்டோ ரபேயேலோ மார்ட்டீனோ . 260309 .
மகளிருக்கான புதிய திட்டங்கள் கடவுளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்கிறார் கர்தினால்
ரெனாட்டோ ரபேயேலோ மார்ட்டீனோ . கர்தினால் ரெனாட்டோ மார்ட்டீனோ வத்திக்கான் திருப்பீட
நீதி மற்றும் அமைதி மன்றத்தின் தலைவராவார் .
சென்ற வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளி்ல்
மனித உரிமைகளை முன்னேற்றுவதில் மகளிரின் பங்கு என்பது பற்றிய கருத்தரங்கு உரோமையில் நடந்தது
. குடும்பம் மற்றும் வாழ்வை வளரச்செய்வது என்பது கருத்தரங்கின் மையக்கருத்தாக இருந்தது
. இது முதலாவது அகில உலக மகளிருக்கான கருத்தரங்காகும் . இது அகில உலக மகளிர் கழகங்களின்
ஒத்துழைப்போடு நடந்தது .
மகளிருக்கு முழு விடுதலை தரப்படவேண்டும் என கர்தினால்
ரெனாட்டோ மார்ட்டீனோ வலியுறுத்தினார் . மகளிருக்கான திட்டங்களில் கடவுளுக்கு முக்கிய
இடமளிக்க வேண்டும் என்றும் கர்தினால் தெரிவித்தார் . கடவுளை நாம் அன்பு மயமாகப் பார்க்கும்போது
மகளிர் வாழ்வில் அன்பு மேலோங்கியிருப்பதால் அவர்கள் வாழ்வில் கடவுள் முக்கிய இடம் பெறவேண்டும்
என அவர் தெரிவித்தார் . முந்தைய மகளிருக்கான திட்டங்கள் தனி ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சியைக்
கருத்தில் கொண்டிருந்தது . புதிய பார்வையில் குடும்பத்துக்காகவும் , மற்றோருக்காகவும்
வாழ்வில் மகளிர் அன்பை இழையோட விடவேண்டும் . ஒழுக்க நெறிகளி்ல் தலை சிறந்ததாகிய அன்பு
மகளிர் வாழ்வை நெறிப்படுத்தவேண்டும் எனக் கர்தினால் ரெனாத்தோ மார்ட்டீனோ தமது உரையின்
போது தெரிவித்தார் .