காஸ்துலுஸ் உரோமைப் பேரரசர் தியோக்கிளேசியன் அரசவையில் உயர் அதிகாரியாக இருந்தவர். கிறிஸ்தவர்களுக்குத்
தனது இல்லத்தில் அடைக்கலம் கொடுத்ததோடு அரச மாளிகையிலேயே மத வழிபாடுகள் இடம் பெற ஏற்பாடு
செய்து கொடுத்தார். கிறிஸ்தவ மதத்திற்கு மனந்திரும்பியவர்களைத் திருமுழுக்கிற்கென திருத்தந்தை
புனித காயிசுவிடம் அழைத்துச் சென்ற காரணத்தால் அரசரால் கைது செய்யப்பட்டு சித்ரவதையும்
செய்யப்பட்டு 286ம் ஆண்டில் மறைசாட்சியாக உயிரிழந்தார் புனித காஸ்துலுஸ்