2009-03-25 14:45:12

இலங்கைத் திருச்சபை இளையோருக்கு மனித வாழ்வின் மதிப்புகளை வலியுறுத்தும் பயிற்சி பசறையை நடத்தியுள்ளது


மார்ச்25,2009. உலகில் தற்கொலைகள் அதிகம் இடம் பெறும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் ஒன்று எனக் கணிக்கப்பட்டுள்ளவேளை, திருச்சபை இளையோருக்கு மனித வாழ்வின் மதிப்புகளை வலியுறுத்தும் பயிற்சி பசறையை நடத்தியுள்ளது.

மேலும், இலங்கையின் 11 மறைமாவட்டங்களில் அனுராதபுரத்தில் தற்கொலைகள் அதிகம் இடம் பெறுவதையொட்டி அம்மறைமாவட்டம் அண்மையில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் முக்கிய பிரமுகர்கள் இளையோருக்கு மனித வாழ்வின் மதிப்புகள் பற்றி எடுத்துரைத்தனர்.

அனுராதபுரப் பகுதியில் 2008ம் ஆண்டிலிருந்து இதுவரை ஏறத்தாழ 200 இளைஞர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர், கடந்த ஜனவரியில் மட்டும் 30 இளையோர் வரை தற்கொலை செய்துள்ளனர் என்று மருத்துமனைகள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.