2009-03-24 12:48:36

இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்புத் திருவிழா .லூக்கா 1,26- 38 .


இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்புத் திருவிழா .லூக்கா 1,26- 38 .

இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்க வந்த வானதூதர் மரியாவைப் பார்த்து அருள்மிகப்பெற்றவரே வாழ்க . ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்றார் . இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி , இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார் . வானதூதர் அவரைப் பார்த்து, மரியா அஞ்சவேண்டாம் . கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் . இதோ , கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் . அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர் . அவர் பெரியவராக இருப்பார் . உன்னத கடவுளின் மகன் எனப்படுவார் என்றார் .அதற்கு மரியா , வானதூதரிடம் இது எப்படி நிகழும் . நான் கன்னியாயிற்றே என்றார் . வானதூதர் அவரிடம் தூய ஆவி உம்மீது வரும் . உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும் . ஆகையால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது . அக்குழந்தை இறைமகன் என்ப்படும் . கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்றார் . பின்னர் மரியா நான் ஆண்டவரின் அடிமை .உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார் .அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார் .



நாமும் கடவுள் விருப்பத்தை ஏற்று இதோ நான் ஆண்டவரின் அடிமை . இறைவா உம் விருப்பத்தை நிறைவேற்றுவதே என் வாழ்வின் பெரும் பாக்கியம் என்போமா .








All the contents on this site are copyrighted ©.