2009-03-22 15:17:27

ஆப்ரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் மோதல்கள் முடிவு பெற அன்னைமரியிடம் செபிப்போம், திருத்தந்தை


மார்ச்22,2009. மரியா இறைவனின் திட்டத்திற்கு ஆகட்டும் என்று சொன்னதை இம் மூவேளை செபத்தில் நினைவுபடுத்துகின்றோம். நம்பிக்கையால் நிறைந்து நீதிக்காகவும் அமைதிக்காவும் தாகமாக இருக்கும், இன்னும், தனது மக்களுக்கு வருங்காலத்தில் முன்னேற்றத்தையும் அமைதியையும் உறுதி செய்யும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக முயற்சிக்கும் ஆப்ரிக்கக் கண்டத்திற்காக அனைவரும் செபிப்போம். வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மாமன்றம் நல்ல பலன்தரவும் செபிப்போம்.

மனிதாபிமானமற்ற அழிவு நிறைந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து தேசிய ஒப்புரவுக்கான பணியில் ஈடுபட்டுள்ள அங்கோலாவை அமைதியின் அரசியாம் மரியா தொடர்ந்து வழி நடத்தட்டும். அந்நாட்டினர் அனைவரும் உறுதியான மன்னிப்பு, ஒருவர் ஒருவரை மதித்தல், மற்றும் ஒத்துழைப்புக்கான அருளைப் பெறுவார்களாக. தெற்கு ஆப்ரிக்காவில் இதயங்களின் மாற்றத்திற்காகவும், பெரிய ஏரிகள் பகுதியில் மோதல்கள் முடிவு பெறவும் அன்னைமரியிடம் செபிப்போம். பேச்சுவார்த்தையின் வழி வன்முறையை முடிவுக்கு கொண்டுவர உழைப்போருக்குச் சக்தி கிடைப்பதற்காகவும் செபிப்போம். இந்தத் திருப்பயணம் நிறைவுக்கு வரவுள்ள இவ்வேளையில் உங்களுக்காகவும் உலகினர் அனைவருக்காகவும் அன்னைமரியிடம் செபிப்போம் என்று இவ்வுரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்







All the contents on this site are copyrighted ©.