2009-03-21 12:14:50

தவக்காலச் சிந்தனை . நற்செய்தி வாசகம் .யோவான் 3,14-21.


இன்றைய வாசகம் கடவுளின் அளவுகடந்த அன்பு பற்றியும் , அவ்வன்புக்குப் பதிலாக நாம் காட்டவேண்டிய இறைப்பற்று பற்றியும் , இறைப்பற்று கொண்டிருத்தல் , அது இல்லாதிருத்தல் இவற்றிற்கு இறைவன் அளிக்கும் தீர்ப்புப் பற்றியும் விளக்குகிறது . நான் செய்யும் அல்லது செய்யாது விடுக்கும் ஒவ்வொரு செயலும் என்னைத் தீர்ப்பிடுகின்றது என்று உணர்ந்து ,நாம் செய்பவற்றைத் திருந்தச் செய்கிறோமா ? .பொல்லாது செய்து ஒளியை வெறுத்து ஒதுக்குகின்றோமா ? . அல்லது நல்லது செய்து இருளைப் புறங்காட்டச் செய்கின்றோமா ? . அன்புச் செயல்களால் நம் வாழ்வை நாம் வளப்படுத்துவோம் .

 








All the contents on this site are copyrighted ©.