சனிக்கிழமை
உள்ளூர் நேரம் காலை 9.45 க்கு , இந்திய நேரம் பிற்பகல் 2.15 மணிக்கு தாம் தங்கியிருந்த
வத்திக்கான் தூதரக மாளிகையிலிருந்து 5 கிமீட்டர் தொலைவிலிருந்த திருத்தூதர் பவுல் அடிகளாரின்
தேவாலயத்துக்குத் திருப்பலி நிகழ்த்த திருத்தந்தை போப்மோபைல் என்னும் குண்டு துளைக்காத
காரில் சென்றார் . அத்தேவாலயம் 1935 ல் கப்புச்சின் துறவற சபையினரால் கட்டி எழுப்பப்பட்டது
. அங்கு 1982 ல் சலேசிய சபைத் துறவியர் பொறுப்பேற்றனர் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின்
வருகைக்காக அவ்வாலயம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது . அவ்வாலயத்தில் ஒரே சமயத்தில் 1500
பேர் கூடியிருக்க முடியும் . அவ்வாலயத்தில் திருப்பலியில் பங்கேற்க வந்திருந்த ஆயர்கள்
, குருக்கள் , துறவியர் , திருச்சபைத் திருப்பணியாளர்கள் ஆகியோருக்குத் திருப்பலி நிகழ்த்தினார்
. திருப்பலி அங்கு காலை 10 மணிக்கு இந்திய நேரம் பிற்பகல் 2.30 க்குத் தொடங்கியது .
திருப்பலியின்
தொடக்கத்தில் பேராயர் கபிரியேல் மிபிலிங்கி , திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றார் .
திருப்பலியின்போது
திருத்தந்தை இன்றைய லூக்கா நற்செய்தி அதிகாரம் 18 , திருவசனங்கள் 9 – 14 ல் உள்ள பகுதிக்கு
விளக்கம் அளித்து மறையுரை வழங்கினார் . உவமையில் வரும் வரி வசூலிப்பவர் தம்மைப் பாவி
என ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு விழைந்ததால் மன்னிப்பாகிய அருளைப்பெற்றார் .
திருத்தூதர்
பவுலின் பிறப்பு விழாவின் 2 ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம்
, அவர் பெயரால் எழுப்பப்பட்டுள்ள தேவாலயத்தில் இச்சமயம் இருக்கும் நாம் , திருத்தூதர்
பவுல் திமோத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலில் பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு
வந்தார் . அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான் என்கிறார் . வரலாற்றின் ஏடுகளில் இறை
அருளால் தொடப்பட்டவர்கள் தொடர்ந்து வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறோம்
என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இந்த திருப்பயணத்தில் நம்மையும் பங்கேற்க அழைத்துள்ள
கடவுளுக்கு நன்றி கூறி , கிறிஸ்துவின் பின்னே நாமும் செல்வோம் . கிறிஸ்துவின் ஒளியைப்
பெறுவோம் எனவும் திருத்தந்தை தெரிவித்தார் .
சகோதர , சகோதரிகளே என் உடன்
உழைப்பாளிகளாகிய உங்களோடு இருப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியுறுகிறேன் . துன்புறும் மக்களுக்கு
ஆறுதலாக இருங்கள் . என்னை வரவேற்ற பேராயர் கபிரியேல் மிபிலிங்கி உங்கள் எதிர்பார்ப்புக்களையும்
, நீங்கள் சவால்களோடு போராடுவது பற்றியும் தெரிவித்தார் . இதயம் நிறைந்த நன்றியோடும்
, நம்பிக்கையோடும் உங்கள் அனைவருக்கும் , உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நான் வாழ்த்துக்கூறுகிறேன்
என்றார் திருத்தந்தை .
நாம் துரிதமாக ஆண்டவர் இயேசுவைப் பின் தொடர்வோம் . அவர்
உண்மையான மனிதரும் மெய்யான கடவுளுமாவார் . தமாஸ்கு செல்லும்போது இயேசுவைச் சந்தித்த பவுல்
அடிகளார் தம்முடைய முந்தைய வாழ்வுக்கு மரித்து , இயேசுவில் புது வாழ்வைக் கண்டது போல
நாமும் கிறிஸ்துவில் புதிய வாழ்வைப் பெறுவோம் எனத் திருத்தந்தை தமது மறையுரையில் அனைவரையும்
ஊக்கப்படுத்தினார் .
நமக்கு முன் சென்றிருக்கும் வீரமிக்க புனிதர்கள் நடந்த
பாதையில் நாமும் செல்வோம் . பல்வேறு துயரங்களால் துன்புறும் மக்களுக்கு கிறி்ஸ்துவின்
அருளை வழங்கி அவர்களுடைய சாந்திக்கும் , மகிழ்ச்சிக்கும் வழிகாண எங்கும் சென்று நற்செய்தியின்
தூதர்களாக இருப்போம் எனக்கூறி தம் மறையுரையை முடித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
.
திருப்பலி முடிந்ததும் சனிக்கிழமை நண்பகல் 12 .30 , இந்திய நேரம் மாலை
5.00 மணிக்குத் திருத்தந்தை வத்திக்கான் தூதரக இல்லத்துக்குத் திரும்பினார் . சனிக்கிழமை
மாலை உள்ளூர் நேரம் 4.30 மணிக்கு , இந்திய நேரம் இரவு 9.00 மணிக்குத் லூவாண்டாவில் உள்ள
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான தென்னந்தோப்பு என்ற அர்த்தம் கொண்ட தோஸ் கோக்கைரோஸ்
விளையாட்டுத் திடலில் திருத்தந்தை இளைஞர்களைச் சந்திக்க உள்ளார் . இஞ்ஞாயிறு காலை உள்ளூர்
நேரம் 10 மணி , இந்திய நேரம் பிற்பகல் 2.30 க்கு அட்லாண்டிக் கடல் நோக்கியிருக்கும் சிமாங்கோலாத்
திடலில் ஆயர்களோடு இணைந்து திருப்பலி நிகழ்த்த உள்ளார் .