ஒரிசாவில் தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதட்ட நிலை . 200309 .
ஒரிசாவின் காந்தமாலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதால் பதட்ட நிலை வரும் என அஞ்சப்படுகிறது
. கிறிஸ்தவர்களுக்கு எதிராக முன்னர் வன்முறையில் தீவிரமாகச் செயல்பட்ட பிரபாத் பனிகிராகி
என்பவர் வன்முறைகள் காரணமாகச் சிறையி்ல் அடைக்கப்பட்டு வெளிவந்தவர் . காந்தமால் மாவட்டத்தில்
இவர் கிறிஸ்தவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தார் . இம்மாதம் 19 காலையில் மாவோக் கட்சியைச்
சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 15 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள ரூதிகுமா கிராமத்துக்குச்
சென்று அவர் தங்கியிருந்த ஒரு தீவிர வாதி வீட்டில் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்
. இதனால் உண்டாக உள்ள வன்முறைகள் காரணமாக கிறிஸ்தவர்கள் தேர்தலில் கலந்து கொள்ளவதைத்
தடுப்பதற்குச் செய்யப்பட்ட சதி என இது கருதப்படுகிறது .