குருக்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கிறது கொலம்பியா நாட்டுத் திருச்சபை .
இவ்வாரம்
திங்கள் இரவு உலக மீட்பர் சபையைச் சேர்ந்த இரண்டு குருக்கள் கொலம்பியாவின் லாபிரிமாவேரா
என்ற இடத்தில் அடையாளம் தெரியாதவரால் கொல்லப்பட்டுள்ளனர் . 40 வயதுடைய அருள் தந்தை கபிரியேல்
பெர்னான்டோவும் , 45 வயதுடைய அருள்தந்தை ஜீசஸ் ஏரியலும் கொல்லப்பட்டுள்ளதற்கு அங்குள்ள
ஆயர்கள் குழுவின் தலைவர் , கொலம்பியாவின் பாரான்குவில்லாவின் பேராயர் ரூபன் கோமஸ் இறந்தவர்கள்
வாழ்ந்த பகுதியின் அப்போஸ்தலிக்க முதன்மைக் குருவுக்கும் , இறந்தவர்களின் உறவினருக்கும்
, உலக மீட்பர் சபையினருக்கும் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் . இந்தக் கொலையைக்
கண்டித்துள்ள பேராயர் திருச்சபை விரும்பும் அமைதிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோரின்
உள்ளத்தைக் கடவுள் தொட்டுக் குணமாக்குமாறும் , இறந்துள்ள தந்தையரி்ன் ஆன்ம சாந்திக்காகவும்
செபித்துள்ளார் .