2009-03-18 15:25:14

நைஜீரியாவில் மாறிமாறி வரும் அரசியல் பயணம் குறித்து ஆயர் பேரவை கவலை


மார்ச்18,2009. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் மாறிமாறி வரும் அரசியல் பயணம் குறித்து கவலை தெரிவித்த அதேவேளை, ஒரு ஸ்திரமான தன்மையை அடைய நாடு இன்னும் நீண்ட பயணம் செய்ய வேண்டியுள்ளது என்று அந்நாட்டு ஆயர் பேரவை கூறியது.

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழ வேண்டிய ஒரு நாட்டை இன்னும் கட்டி எழுப்ப வேண்டியுள்ள நிலையில் மக்களின் வாழ்வும் சொத்துக்களும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன என்று ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் இடம் பெறும் இனச் சண்டைகள், வடபகுதியின் சமய மோதல்கள், தென்பகுதியில் நைஜர் பிரச்சனை ஆகியவை அந்நாட்டின் பாதுகாப்பின்மைக்குக் காரணங்களாக அமைகின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.