ஆங் சான் சு கி யோடு தொடர்புடைய மற்றுமொரு தலைவர் கைது
மார்ச்18,2009. மியான்மார் ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சு கி யோடு தொடர்புடைய
மற்றுமொரு தலைவரை அந்நாட்டு இராணுவ அரசு கைது செய்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.
2010ம்
ஆண்டில் அரசியல் தேர்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு எதிர்கட்சியை வேரோடு அமுக்கும்
நோக்கத்தில் இக்கைது இடம் பெற்றதாக ஊடகங்கள் மேலும் கூறுகின்றன.
15 நாடாளுமன்ற
உறுப்பினர்கள், 229 மாணவர்கள், 220 புத்தத் துறவிகள், உட்பட 2131 அரசியல் கைதிகள் மியான்மாரில்
சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.