வருகிற நவம்பர் 23 முதல் 27 வரை பிலிப்பைன்சில் 5வது ஆசிய இளையோர் தினம்
மார்ச்14,2009. வருகிற நவம்பர் 23 முதல் 27 வரை பிலிப்பைன்சில் நடைபெறவிருக்கின்ற 5வது
ஆசிய இளையோர் தினத்திற்குத் தயாரிப்பாக இன்று சிலாங் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்திநார்
ஆயர் லூயிஸ் அந்தோணியோ தாக்லே.
ஆசிய இளையோரில், இறைவார்த்தையிலும் திருநற்கருணையிலும்
விசுவாசத்தையும் அன்பையும் புதுப்பிப்பதற்கும், இவற்றைத் தங்கள் வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கும்
இத்தினம் உதவும் என்று ஆயர் ஆயர் கூறினார்.
ஆசிய இளையோர் தினம்-இளம் ஆசியர்கள்
ஒன்றிணைந்து வந்து இறைவார்த்தையைப் பகிர்ந்து கொண்டு திருநற்கருணையை வாழ்வதென்பது இத்தினத்திற்கானத்
தலைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.