ஈராக்,கொல்லப்பட்ட மோசூல் பேராயருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.1303
ஈராக்கில் கொல்லப்பட்ட மோசூல் பேராயர் பவுலோ பாராஜ் ராஹோவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
இந்த வெள்ளி்க்கிழமை கிர்க்குக் நகரில் கொண்டாடப்பட்டது . மோசூலின் கல்தேய ஆயர் ராஹோ
ஓராண்டுக்கு முன்னர் பிப்ரவரி 29 ல் கடத்தப்பட்டு மார்ச்சு 13 ல் கொல்லப்பட்டார் . மேலும்
700 கிறிஸ்தவர்கள் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள் . கிர்க்குக் நகரில் பேராயர் லூயிஸ்
சாக்கோ இறந்தோருக்கான நினைவஞ்சலித் திருப்பலி நடத்தினார் . கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும்
வழிபாட்டில் கலந்து கொண்டு இறந்த வேத சாட்சிகளின் ஆன்ம சாந்திக்காக மன்றாடினார்கள் .
இந்த வேத சாட்சிகள் சிந்திய இரத்தம் ஈராக்கின் ஒற்றுமைக்கும் சமாதானத்துக்கும் அழைப்பு
விடுப்பதாகப் பேராயர் சாக்கோ கூறியுள்ளார் .