இலங்கையின் மதத் தலைவர்கள் துன்புறும் மக்களுக்கு உதவி . 130309 .
இலங்கையின் மதத் தலைவர்கள் போர் காரணமாகத் துன்புறும் மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகிறார்கள்
. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் போர் கடுமையாக நடந்து வருவதால் அங்கிருந்து தப்பித்து
பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் மக்களுக்கு கிறிஸ்தவ , இஸ்லாமிய , மற்றும் புத்த
மதத் தலைவர்கள் உணவுப்பொருட்களையும் , மற்ற அவசியப் பொருட்களையும் கொடுத்து உதவி வருகிறார்கள்
. 8 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அரசினர் வசம் ஒப்படைத்து வவுனியாப்பகுதியில்
முகாம்களில் தங்கியிருக்கும் 40, 000 மக்களுக்கு அளித்துள்ளார்கள் . இன்னும் 1 , 50
, ஆயிரம் பேர் போர் நடக்கும் ஆபத்தான சூழ்நிலையில் தவித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது
. அங்குள்ள ஹெட்டிப்போலாவின் தந்தை நீல் கிறிஸ்சாந்தா இது பற்றிக் கூறுகையில் அனைத்து
மதத்தவரும் இணைந்து துயர் உறுவோருக்கு உதவவேண்டும் எனவும் சிங்களம் பேசும் மக்கள் தமிழர்களுக்கு
இந்த வேளையில் உதவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .