திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது ஆண்டுத் தியானத்தை நிறைவு செய்துள்ளார்
மார்ச்07,2009. நம் முன்னால் எப்பொழுதும் சென்று கொண்டிருக்கும் இயேசுவைப் பார்ப்பதற்கு
நாம் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீட
அதிகாரிகளுடன் சேர்ந்து கடந்த ஞாயிறு மாலை தொடங்கிய தனது ஆண்டுத் தியானத்தை இன்று காலை
நிறைவு செய்த திருத்தந்தை, தங்களுக்குத் தியான உரைகள் வழங்கிய கர்தினால் பிரான்சிஸ் அரின்சேவுக்கு
நன்றியும் பாராட்டும் தெரிவித்த போது இவ்வாறு கூறினார்.
கர்தினால் அரின்சே, தனது
ஐம்பது வருட குருத்துவ வாழ்வின் அனுபவத்திலிருந்து வெகு எளிமையான முறையில் குருத்துவ
வாழ்வின் மேன்மை பற்றி இவ்வுரைகளில் விளக்கியதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த அறிவுரைகலைப்
பலர் பின்பற்றுவார்கள் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்