2009-03-05 15:31:33

தூய பவுலின் அடிச்சுவட்டில் ஐரோப்பிய ஆயர்களின் கருத்தாய்வு,050309


திருத்தூதர் பவுலின் அடிச்சுவட்டில் கருத்தாய்வு மேற்கொள்கின்றனர் ஐரோப்பிய ஆயர்கள் .

கிறிஸ்தவத்தின் தனிச் சிறப்பை வலியுறுத்த வத்திக்கான் பிரதிநிதிகளும் , தென் கிழக்கு ஐரோப்பாவின் 8 ஆயர்குழுவின் பிரதிநிதிகளும் துருக்கியில் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர் . தென்கிழக்கு ஐரோப்பாவின் ஆயர்குழுத் தலைவர்கள் இந்த வாரம் ஞாயிறுவரை அவர்களது 9 வது கருத்தரங்கில் பங்கேற்கின்றனர் . திருப்பீடத்தின் பிரதிநிதியாக இக்குழுமத்தின் பார்வையாளர் மேதகு ஆல்டோ ஜோர்டானோவும் இதில் கலந்து கொள்கிறார் . பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுக்கு நடுவே திருத்தூதர் பவுல் திருச்சபையைக் கட்டி எழுப்ப ஆற்றிய மகத்தான சேவையின் அடிச்சுவட்டில் தங்கள் பணிகள் பற்றி ஆராயவுள்ளனர் . இவ்வாரம் சனியன்று எக்யூமெனிக்கல் பிதாப்பிதா முதலாவது பர்த்த லேமியு அவர்களை வரவேற்க உள்ளார் .








All the contents on this site are copyrighted ©.