இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக கத்தோலிக்கர்களின் செபம். 050309.
காயமுற்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக அங்குள்ள கத்தோலிக்கர்கள் செபிக்கின்றார்கள்
. மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி 15 பேரைக் கொண்ட இலங்கையின் ஆட்டவீரர்கள் நாடு திரும்பினர்
.தலையில் காயமுற்ற 23 வயதாகும் அஜந்தா மெண்டிஸ் கத்தோலிக்கராவார் . தாக்குதல் முடிந்ததும்
அவர் தம் அன்னையோடு தொடர்பு கொண்டு நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மெண்டிஸ் வாழ்ந்துவரும்
கதல்னா பங்குத் தல தந்தை பிரசாத் பெரேரா பாகிஸ்தான் செல்வதற்கு முன்னர் மெண்டிஸ் அவருடைய
ஆசியைப் பெற்றுச் செல்வது வழக்கம் என்றும் இந்த முறையும் ஆசி பெற்றுச் சென்றதாகவும் ,
மேலும் அவரது குடும்பம் பக்தியுள்ள குடும்பம் என்றும் கூறியுள்ளார் .