2009-03-02 15:29:15

வத்திக்கான் ஆன்மீகப்பயிற்சியில் சிறப்புப் பிரார்த்தனை .020309 .


திருத்தந்தையும் வத்திக்கான் செயலக உறுப்பினர்களும் ஆறு நாள் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் . இந்த வாரம் 01 மார்ச்சு ஞாயிறு மாலை தொடங்கி வருகின்ற சனிக்கிழமை மாலை வரை வத்திக்கானில் ஆழ்ந்த செபத்தில் மூழ்கியிருப்பர் . ஆன்மீகப் பயிற்சியை கர்தினால் பிரான்சிஸ் அரின்ஷே வழிநடத்துவார் . இந்த வாரத்தில் திருத்தந்தை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார் . 76 வயதாகும் கர்தினால் அரின்ஷே ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் 25 ஆண்டுகளாகக் குருவாகப் பணிசெய்திருக்கிறார் . மேலும் 25 ஆண்டுகள் வத்திக்கான் திருப்பீடத்தில் பணிசெய்துள்ளார் . வத்திகானின் இறை வழிபாடு மற்றும் திரு அருள்சாதன மன்றத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் . கிறீஸ்துவைச் சந்தித்து அவரைப் பின்பற்றுகிறார் குருவானவர் என்பது ஆன்மீகப்பயிற்சிகளின் மையக்கருத்தாக இருக்கும் .








All the contents on this site are copyrighted ©.