படை வீரர் கலகத்தை டாக்காவின் பேராயர் கண்டிக்கிறார் .020309.
பங்களாதேஷ் நாட்டில் நடந்த படை வீரர் கலகத்தை டாக்காவின் பேராயர் கண்டிக்கிறார் . மார்ச்சு
மாதம் முதல் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்காவின் பேராயரும் அந்நாட்டின் ஆயர்குழுவின்
தலைவருமான பவுலைனஸ் கோஸ்டா இந்தப்படுகொலையையும் பொருட்களைச் சூறையாடியதையும் வன்மையாகக்
கண்டித்துள்ளார் . பங்களாதேஷ் நாட்டின் கிறிஸ்தவ சமூகம் மிகவும் வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்
. கலகத்தில் இறந்தோருக்காகவும் பாதிக்கப்பட்டோருக்காகவும் தொடர்ந்து மூன்று நாட்கள் கிறிஸ்தவ
ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன .