திருமுழுக்குப் பற்றி நாம் பெருமை கொள்வோம்,கர்தினால் ரைல்கோ. 020309
நமது திருமுழுக்குப் பற்றி நாம் பெருமை கொள்ளவேண்டும் என்கிறார் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ்
ரைல்கோ . கர்தினால் ரைல்கோ வத்திக்கான் திருப்பீடத்தின் பொது நிலைக் கிறிஸ்தவ மக்கள்
மன்றத் தலைவராக இருக்கிறார் . உரோமையில் உள்ள திருப்பீடத்தின் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில்
முந்நாள் திருத்தந்தையின் சுற்றறிக்கை பற்றி சென்ற சனிக்கிழமை கர்தினால் ரைல்கோ உரை நிகழ்த்தினார்
. 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் கத்தோலிக்கப் பொது நிலைக் கிறிஸ்தவர்களுக்கு
கிறிஸ்திபிதலெஸ் லயிச்சி என்ற சுற்றுமடல் வரைந்திருந்தார் . பொது நிலைக் கிறிஸ்தவர்களின்
இறை அழைப்பு மற்றும் நற்செய்திப்பணியில் அவர்களின் பங்கேற்றல் பற்றி அந்தச் சுற்று மடல்
விளக்கம் தந்திருந்தது . அச்சுற்றுமடல் திருச்சபையின் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்தி
தத்தமது அலவல்களை மறந்துவிடுவதையும் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழலை மறந்து வாழ்வதையும்
, அதே சமயம் இறை விசுவாசத்தையும் , வாழ்வையும் பிரித்து நோக்குவதையும் தவிர்க்க வேண்டும்
எனவும் கூறியிருந்தது . பொதுநிலை மக்களின் தனிச்சிறப்பு திருமுழுக்கிலிருந்து வருவதாகக்
கர்தினால் தெரிவித்தார் . நம்முடைய திருமுழுக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் பெருமை
கொள்ளவேண்டும் எனக் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் ரைல்கோ தம் உரையில் தெளிவுபடுத்தினார்.