2009-03-02 15:38:14

தவக்காலம் உண்மையோடு வாழும் காலம் , தந்தை லொம்பார்டி. 020309 .


தவக்காலம் முகமூடிகளைக் களைந்துவிட்டு உண்மையோடு வாழும் காலம் என்கிறார் வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் இயேசு சபையைச் சேர்ந்த பெடரிக்கோ லொம்பார்டி . சென்ற வியாழன் அன்று திருத்தந்தை உரோமையில் உள்ள குருக்களைச் சந்தித்து உரை வழங்கினார் . அதுபோது மக்கள் குருக்களிடம் முகமூடி அணியாது உண்மையுள்ளவர்களாக வருவது போல , குருக்களும் தங்கள் நற்செய்தி அறிவிப்பில் தங்கள் கல்வித்திறனை முழுவதுமாக வெளிக்காட்ட நினைக்காது எளியமுறையில் மக்களுக்கு நற்செய்தியை பகிர்தல் வேண்டும் எனக்கூறியிருந்தார் . அது பற்றிக்கூறிய தந்தை லொம்பார்டி நாமும் இத்தவக்காலத்தில் முகமூடி அணிந்து கொண்டு கடவுளிடம் செல்லாது கடவுளிடம் நம் வாழ்வில் முக்கியமானவற்றை உண்மையுள்ள முறையில் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.