தவக்காலம் ஒரு தனிக்காலம் . இறைவன்
நம் அருகில் உள்ள காலம் .இறைவனிடம் நாம் திரும்பி வருவதற்கு ஏற்ற காலம் . மனமாறறத்தின்
காலம் .மறுவாழ்வை மனதிற்குக் கொண்டு வரவேண்டிய காலம் .
இன்றைய வாசகம் இயேசு பாலைவனத்தில்
சோதிக்கப்பட்டதையும் , அவருடைய போதனையின் சுருக்கத்தையும் எடுத்துக் கூறுகிறது . இறைவன்
என்றும் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் நற்செய்தி . இந்நற்செய்தியை நாம் இரண்டு வழிகளில்
வாழ்வுப் படுத்தலாம் . சோதனைகளைக் கண்டு தளர்ந்துவிடக்கூடாது . மனம் திரும்பிய புதிய
வாழ்வு வாழவேண்டும் .
தீவிர விளையாட்டு வீரர்கள் தங்களை நன்கு தயார் செய்கிறார்கள்
. திறமையான நடிகர்கள் நல்ல பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள் .நல்ல ஆசிரியர்கள் வீட்டில்
தங்களைத் தயாரித்துக் கொள்கிறார்கள் . தமது வாழ்வின் பணியைத் தொடங்குவதற்கு முன்னர்
பாலைவனத்துக்குச் சென்று உறுதிப்படுத்திக் கொள்கிறார் .பாவமே அறியாத இயேசு சாத்தானுக்கு
அடிபணியாதிருக்க பசித்திருப்பதும் , தனித்திருந்து செபிப்பதும் நம் நெஞ்சைத் தொடுகின்றன
.மேலும் நம்மை திகைக்க வைத்து சிந்திக்க வைக்கின்றது .
சிலர் தவக்காலத்தில்
எதையாவது விட்டுவிடுவார்கள் . சிலர் சில நல்ல காரியங்களை தமது பழக்கத்துக்குக் கொண்டுவருவார்கள்
. தவக்காலத்தின் முடிவில் நாம் பயனுள்ள முறையில் எதையாவது அடைந்தோமா எனப் பார்க்கவேண்டும்
. அல்லது எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என உணர்கிறோமா . நம்மில் மாற்றம் ஏதும் இல்லை
, நம்மில் பழைய தவறான போக்குகளே இன்னும் இருக்கின்றன , பழைய பாவ நாட்டங்களும் சோதனைகளும்
நம்மை தடுமாறச் செய்கின்றன , பழைய தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கிறோம் என்ற நிலையில்
இருக்கிறோமா . ஒருவேளை நம்முடைய முயற்சிகள் ஆழமாக வேரூன்றி நம்மில் மாற்றத்தைத் தராதிருக்கலாம்
. நாமெல்லாம் கடுமையான நோய்க்கு சாதாரணச் சிகிச்சையையே அளிக்கும் மருத்துவர்களைப் போன்றவர்கள்.
நச்சு மரத்தின் வேரை வெட்டி வீழ்த்தாது உச்சிக் கொம்புகளை வெட்டிக் கொண்டிருப்பதில் என்ன
பயன் .
மாமரம் சரியாக காய்ப்பதில்லை என்பதால் தோட்டக்காரர் நன்கு கொத்திவிட்டு
, உரமிட்டு , நீர் பாய்ச்சியும் மரம் பலனே தராது என்ற நிலைக்கு வந்துவிட்டபோது அதை வெட்டிவிட்டு
வேறு ஒரு மரத்தை நட்டுவைப்பதுதான் சரியான செயலாகும் . ஒன்று மாங்கனி சாப்பிடுவதை மறக்க
வேண்டும் . அல்லது பயனில்லாத மரத்துக்குப் பதிலாக அதை நீக்கிவிட்டு பயன் தரக்கூடிய நல்ல
வகை மரத்தை நடவேண்டும் . நாம் அப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவரச் சம்மதிப்போமா . அப்படிப்பட்ட
முடிவுகளை எடுக்குமாறு மக்களுக்கு இயேசு அழைப்பு விடுத்தார் . பழைய துணியில் புதுத்
துணியை ஒட்டுப்போடுதல் பயன் தராது . புதிய ஆடை வேண்டுமென்றால் பழையதை கழித்துவிடவேண்டும்
. புதிய திராட்சை ரசத்துக்கு பழம் சித்தைகள் பயன்பட மாட்டா . பழைய சித்தைகளை வீரியமுள்ள
புது திராட்சை ரசம் உடைத்துவிடும் .
இத்தவக்காலத்தில் நாம் நல்லெண்ணத்தோடு பழைய
துணிகளில் புதுத்துணிகளை ஒட்டுப் போடும் காரியத்தைச் செய்தால் பயன் இல்லை . பழுது பட்ட
மரத்தை வெட்டி எறிந்து விட்டு புது மரத்தை நடுவதற்குப் பதிலாக பழைய மரத்திற்கு மருத்துவம்
செய்வதில் என்ன லாபம் . இது பயன் தராத முயற்சியாகும் .
நம்முடைய பழைய
கால அனுபவங்களை ஆராய்ந்து எங்கெல்லாம் மாற்றம் தேவையோ அங்கு மாற்றத்தைக் கொண்டுவர நாம்
தயாராகவேண்டும் .
நம் வாழ்வை புனிதமானதாக மாற்றுவதற்கு முயற்சியும் தியாகமும்
தேவை . கடவுளுடைய அருள் துணையும் அவசியம் தேவை . அவருடைய துணையின் நம்மால் ஏதும் செய்ய
இயலாது . குடிபோதையில் இருக்கும் ஒருவரால் கோடு போடமுடியும் . ஆனால் அக்கோடு நேர் கோடாக
இராது . நேராகக் கோடு போடுவதற்குப் பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும் . அதேபோலத்தான்
வாழ்வென்னும் கோடும் . நேர்மையாக வாழ்வதற்கு நாம் நம்மைப் பண்படுத்த வேண்டும் .
தவக்காலம்
நம் வாழ்வை உற்று நோக்கி தேவையான மாற்றங்களைக் கொண்டுவர அழைப்பு விடுக்கிறது – அபாயச்
சங்கு ஊதுகிறது . நாம் நம்மையே புதுப்பித்துக் கொள்ளவில்லையென்றால் மாற்றம் கொண்டுவர
ஓர் அருமையான வாய்ப்பை நழுவ விட்டுக் கொண்டிருக்கிறோம் . பாலை வனத்தில் இயேசு தமக்கு
வந்ந சோதனைகளை வென்று சாத்தானை விரட்டியடிப்பதைக் காணும் நாம் நாமும் அவ்வாறே செய்யவேண்டும்
எனச் சிந்திக்க வேண்டாமா . அவருக்கும் பொது வாழ்வைத் தொடங்குவதற்கு முன்னர் கடுமையான
திட்டங்களைத் தீட்டவேண்டியிருந்தது .
யோவேல் இறைவாக்கினர் அறைகூவல் விடுக்கிறார்
.... உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள் , உங்கள் ஆடைகளை அல்ல . இத்தவக்காலம்
நம் மனங்களைத் தொடவில்லை , நம் வாழ்வில் அவசிமான மாற்றங்களைக் கொண்டு வரவில்லையென்றால்
பின்னர் தவக்காலத்தால் யாதொரு பயனுமில்லை . நம் இதயங்களில் மாற்றம் கொண்டுவருதல் இறை
அருளை நிறைவாகப் பெற்றுத் தந்து நம் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் .
தவக்காலம்
தியாகமும் , தவமும் நிறைந்தது மட்டுமல்ல , அது நமக்குப் புதுப்பிறப்பு அளித்து நம்மை
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் . தவக்காலம் வசந்த காலம் . தவக்காலம் வளர்ச்சியின் காலம்
.
நம் வாழ்வின் வெளிப்புறத்தில் மாற்றம் கொண்டுவர மனதுக்குள் மாற்றம் தேவை
. அதற்குச் சுய கட்டுப்பாடு தேவை .பழைய பழக்கங்களை நீக்கி நல்ல புதிய பழக்கங்கங்களை கைக்கொள்ள
வேண்டும் . முக்கியமாக நாம் செபம் செய்து இறைவனின் அருளை வேண்டிப் பெறவேண்டும் .
ஒவ்வொரு
வசந்த காலத்திலும் உலகைப் புதுப்பிக்கும் கடவுள் நம்மையும் புதுப்பித்து நாம் பாஸ்காப்
பெருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ அருள் தருவாராக .