பழமையான கொள்கைப்பிடிப்புள்ள ஆயர் ரிச்சர்டு
வில்லியாம்சன் 4 மாதங்களுக்கு முன்னர் ஸ்வீடன் நாட்டுத் தொலைக்காட்சியில் ஜெர்மனியின்
விஷவாயுச் சிறையி்ல் யூதர்கள் கொல்லப்பட்டதை இல்லையென நிராகரித்திருந்தார் . திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் அவர்களும் , வில்லியாம்சனின் தலைமை ஆயர் பெர்நார்து பெல்லேயும் கேட்டுக்
கொண்டதன் பேரில் தாம் கூறியவற்றை மீண்டும் சிந்தித்து அவ்வாறு முன்னர் தெரிவித்ததற்கு
வருத்தம் தெரிவித்தார் . அவர் முன்னர் கூறிய கருத்துக்களால் திருச்சபைக்கும் , அநீதியாகக்
கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் மாபெரும் மனவேதனையைத் தரும் என்பதை உணர்ந்திருந்தால்
அவர் அவ்வாறு தெரிவித்திருக்கமாட்டேன் எனவும் செய்தி வெளியிட்டிருக்கிறார் . இதற்கு முன்னர்
அவர் இந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி திருத்தந்தைக்கும் , பிரிவினைத் திருச்சபை உறுப்பினர்களை
நல்லுறவுக்குக் ஒப்புரவு செய்யும் கடவுளின் திருச்சபை என்ற வத்திக்கான் மன்றத் தலைவர்
மேதகு கர்தினால் டாரியோ காஸ்திரில்லோனுக்கும் தம் வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.