இலங்கைச் சண்டையில் சிக்கியுள்ள மக்கள் மீட்கப்பட குரல் கொடுக்கிறது காரித்தாஸ் அமைப்பு.
பிப். 26. வன்முறைகளின் இடையில் சிக்கியுள்ள இலங்கையின் இரண்டரை இலட்சம் மக்களின் துன்ப
நிலைகள் உச்சத்தை எட்டியுள்ளதாகவும், இதற்கொரு அரசியல் தீர்வு கிட்டுவதற்கான வாய்ப்புகள்
குறைந்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம்.
முன்பு
எப்போதும் இல்லாத அளவுக்கு மனிதகுல பேரிழப்பு இடம்பெற்று வருவதாகக் கவலையை வெளியிடும்
காரித்தாஸ் அமைப்பு, போருக்கு மத்தியில் சிக்கியிருக்கும் மக்கள் மீட்கப்படவேண்டும்
என விண்ணப்பித்துள்ளது.