2009-02-21 15:30:22

இலங்கைக்கான புதிய திருப்பீடத் தூதர் பேரருட்திரு ஜோசப் ஸ்பித்தேரி


21பிப்.2009. இலங்கைக்கான திருப்பீடத் தூதராக பேரருட்திரு ஜோசப் ஸ்பித்தேரியை இச்சனிக்கிழமை நியமித்து அவரைப் பேராயர் என்ற நிலைக்கும் உயர்த்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

1959ம் ஆண்டு மே 20ம் தேதி மால்ட்டாவில் பிறந்த இவர், 1984ல் குருவானார். திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 1988, ஜூலை 15ம் தேதி திருப்பீட தூதரகப் பணித்துறையில் இணைந்தார்.

பானமா, ஈராக், மெக்சிகோ, போர்த்துக்கல், கிரீஸ், வெனேசுவேலா, ஆகிய நாடுகளின் திருப்பீட தூதரகங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இலங்கைக்கான புதிய திருப்பீடத் தூதர் பேராயர் ஜோசப் ஸ்பித்தேரிக்கு ஆங்கிலம், இத்தாலியம், ப்ரெஞ்ச், ஸ்பானியம் மற்றும் போர்த்துக்கீசிய மொழிகள் தெரியும்.








All the contents on this site are copyrighted ©.