2009-02-20 19:05:31

வத்திக்கான் திருப்பீடமும் இஸ்ராயேல் நாடும் பேசும் ஒப்பந்தம்.200209.


வத்திக்கான் திருப்பீடமும் இஸ்ராயேல் நாடும் பேசிவரும் ஒப்பந்தத்தில் முன்னேற்றம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இரு நாடுகளின் பிரதிநிதிகளும் விரைவில் நல்ல முடிவுக்கு வர உள்ளனர் . 1993 ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டபடி விரிவான ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது . இவ்வாரம் புதனன்று பிரதிநிதிகள் சந்தித்து பொருளாதாரம் பற்றியும், இஸ்ராயேலில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் சொத்துக்கள் பற்றியும் விவாதித்தனர் . ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகள் நல்ல ஒத்துழைப்போடு நடந்துவருவதாக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர் . வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி அடுத்த கட்டப் பேச்சு வார்த்தைகள் தொடரும் எனத் தெரிகிறது . திருத்தந்தை இஸ்ராயேலுக்கு மே மாதம் செல்லவுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.