பொதுத் தேர்தலில் குடிமக்கள் மனசாட்சியின்படி ஓட்டளிக்க இந்தோனேசிய சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்
18பிப்.2009. இந்தோனேசியாவில் வருகிற ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் குடிமக்கள்
மனசாட்சியின்படி ஓட்டளிக்குமாறு அந்நாட்டு சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தோனேசியாவின்
கத்தோலிக்க, இந்து, முஸ்லீம் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 40 பிரதிநிதிகள்
அண்மையில் நடத்திய கூட்டத்தில் இவ்வழைப்பை முன்வைத்தனர்.
மக்கள் மனசாட்சியின்படி
ஓட்டளிக்க வேண்டும், அதேசமயம் சமயத் தலைவர்கள் அவர்களின் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை
மதிக்க வேண்டும் என்றும் அத்தலைவர்கள் கூறினர்.
இந்தோனேசியாவில் ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. வருகின்ற ஏப்ரல் தேர்தலில் 44 அரசியல் கட்சிகள்
போட்டியிடுகின்றன.