கியூபாவில் ஸ்பானிய குரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
17பிப்.2009. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் புறநகர்ப் பகுதியில் ஸ்பானிய குரு ஒருவர்
கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
ஏழைமக்களுக்கு உதவி வந்த பெரும் மனிதர்
என ஸ்பானிய தூதரகத்தால் வர்ணிக்கப்படும் ஹவானாவின் புனித பிளாரன்ஸ் பங்குக்குரு தெ லா
புவன்த்தே, புறநகர்ப் பகுதியில் அவரின் வாகனத்தில் அருகே கொலையுண்டு கிடந்தார்.
இத்தகைய
வகையில் குரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளது கியூபத் திருச்சபைக்கு புதியதாகும் என்று தன்
கவலையை வெளியிட்டார் கர்தினால் ஹைமே ஒர்த்தேகா.
காவல்துறையின் கூற்றுப்படி குருவின்
வாகனம் முழுதும் தீயிட்டு கொலையாளிகளால் எரிக்கப்பட்டுள்ளது.