2009-02-17 16:39:34

18-02-09 - இன்றைய நற்செய்தி . மாற்கு 8, 22 – 26 .


அவர்கள் பெத்சாயிதா வந்தடைந்தார்கள் . அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து , அவரைத் தொடும்படி வேண்டினர் . அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார் . அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து , “ஏதாவது தெரிகிறதா” ? என்று கேட்டார் . அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன் . அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள் . ஆனால் நடக்கிறார்கள்”, என்று சொன்னார் . இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார் . அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார் . இயேசு அவரிடம் , “ஊரில் நுழைய வேண்டாம்” , என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார் .








All the contents on this site are copyrighted ©.