வாரனாசியில் சிக்னிஸ் இந்தியாவின் தேசிய மாநாடு.160209.
சிக்னிஸ் இந்தியாவின் 6 வது தேசிய மாநாடு வாரனாசியில் இம்மாதம் 13 லிருந்து 17 வரை நடந்து
வருகிறது . சிக்னிஸ் இந்தியா கிறிஸ்தவ தொடர்பு சாதன அமைப்பாகும் . இதில் 300 உறுப்பினர்கள்
இருக்கிறார்கள் . இது இந்திய ஆயர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது . வாரனாசியின் நவ
சாதனாவில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் 90 உறுப்பினர்கள்
கலந்து கொண்டுள்ளார்கள் . தொடர்பு சாதன நோக்கில் ஆன்மீகமும் சமயமும் என்பது மையக்கருத்தாக
இருக்கிறது . தேசியப் புதுப்பித்தலுக்காக பணிசெய்துவரும் தர்மபாரதி ஆசிரமத்தின் தலைவர்
தந்தை சுவாமி சி்த்தானந்த பாரதி தலைமை உரை வழங்கியுள்ளார் . வாரனாசி மறைமாவட்ட முந்நாள்
ஆயர் பாட்ரிக் டீசுசா தொடக்க வழிபாட்டுத் திருப்பலியை நிகழ்த்தியுள்ளார் . பல முக்கிய
தொடர்பு ஊடகத்தினர் இதில் பங்கேற்கிறார்கள் .